நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்

 
பவர் ஸ்டார்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து இராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Power Star Arrested In Money Defrauding

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் உப்பளம் மற்றும் இறால் பண்ணை அதிபர் முனியசாமி .இவர் தொழில் அபிவிருத்தி செய்வதற்காக ரூ 15 கோடி கடன் வாங்கி தருவதாக  நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு டாக்குமெண்டேஷன் சார்ஜ் ஆக ரூ 14 லட்சம் தர வேண்டும் என்று கூறவும், இரால்பண்ணைஅதிபர் முனியசாமி ரு 14 லட்சத்தை  2019 ல் வழங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு கடனும் வாங்கி தரவில்லை. டாக்குமெண்டேஷன் சார்ஜையும் திரும்பத் தரவில்லை.  ரூ 14 லட்சத்திற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் கொடுத்த செக்  வங்கியில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலதிபர் முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

Powerstar Srinivasan – Scooptimes

இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்ததால் இன்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேஸ்வரன் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்த குற்றத்திற்காக அவருக்கு பிடிவாரென்று பிறப்பித்து உத்தரவிட்டார். இராமநாதபுரத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்து செக் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 . 2 2024 அன்று நேரில்  ஆஜராக மாறு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.