முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

 
tn

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்ள் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போல் தரம் குறைக்கும் வகையில், மாநிலங்களவையில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதாவினை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எதிர்த்ததைத் தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவித்து மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று (8-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

mk stalin

மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

aravind

இந்திய அரசியலமைப்பின் கொள்கைகள் மீது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை பல்லாண்டுகளுக்கு நினைவுகூரப்படும் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அவர்கள், அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு சக்திகளுக்கு எதிரானபோராட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.