அஜித் இருக்கும் வரை விஜய்க்கு.. கவிஞர் வைரமுத்து உருக்கம்

 
v

கவிஞர் வாலிக்கு போட்டியாக இருந்தவர் கவிஞர் வைரமுத்து.  பல ஆண்டுகளாக வைரமுத்துவும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு திரை உலகில் வெற்றி நடை போட்டு வந்தார்கள்.  வாலியின் மறைவுக்கு பின்னர் போட்டி இல்லாமல் பிடிமானம் இல்லாதது போல் சுற்றிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து .

வாலி மற்றும் வைரமுத்து இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும் அவர்கள் எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டு வந்தனர்.  அது தவறு என்று ஒரு விழாவில் கூறினார் வாலி .  

vai

வாலிக்கு வைரமுத்து மோதிரம் அணிவித்தார்.  அப்போது பேசிய வாலி,   நாங்க ரெண்டு பேரும் மோதுறோம் மோதுறோம் என்று சொல்லி வந்தார்கள்.  அது இல்லை என்பதை சொல்வதற்காக தான் இந்த மோதிரம் பரிசாக தந்து மகிழ்கிறார் என்று சொல்லி இருந்தார் . 

வாலி கடந்த 2013 ஆம் ஆண்டில் மறைந்தார்.  அவரது மறைவுக்கு பின்னர் போட்டி இல்லாதது தனக்கு பிடிமானம் இல்லாதது போல் இருப்பதாக கூறியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. 

 இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார்:

கமல் இருக்கும் வரை
ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை
கமலுக்கும்

விஜய் இருக்கும் வரை
அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை
விஜய்க்கும்

ஒரு பிடிமானம் இருக்கும்

எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு
போய்விட்டீர்களே
வாலி அவர்களே

காற்றில் கத்தி சுற்றிக்
கொண்டிருக்கிறேன்

v