ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைப்பு

 
tn

குமரியில் இருந்து பல மாவட்டங்கள் வழியாக சென்னை வந்த ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை  முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (2.8.2023) தலைமைச் செயலகத்தில், 7-வது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 சென்னை” போட்டிக்கான “பாஸ் பால் கோப்பை” சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று சென்னை வந்தடைந்ததையொட்டி அக்கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திரு. முகமது தயப் இக்ராம் அவர்கள் வழங்கினார்.

tn

7வது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 சென்னை” போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் (Upgraded Hockey Stadium), ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் (Olympic Standard New Synthetic Turf) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் (Kalaignar Centenary Pavilion) ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.7.2023 அன்று திறந்து வைத்தார்.

stalin

"ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 சென்னை” போட்டி நடைபெற உள்ளதையொட்டி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் 20.07.2023 அன்று சென்னை மெரினா கடற்கரையில் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்யப்பட்டு, “பொம்மன்” இலச்சினையை வெளியிட்டார். மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் “பாஸ் தி பால்” கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார். பாஸ் தி பால் கோப்பை” சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று நேற்று (1.8.2023) சென்னை வந்தடைந்தது. இந்த கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திரு. முகமது தயப் இக்ராம் அவர்கள் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.