முதுமலையில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் சி.எம்.பாலன் உயிரிந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்து முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் கும்கி யானைகள், சவாரிக்கு பயன்படும் யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் மற்றும் குட்டி யானைகள் ஆகியவை பாகன்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்திருக்கிறார்.
மசினி என்கிற யானைக்கு அதன் பாகன் சி.எம்.பாலன் இன்று காலை உணவு அளிக்க அருகே சென்ற போது பாகனை திடீரென தாக்கியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாகன், செல்லும் வழியே உயிரிழந்தார். இந்த மசினி யானை ஏற்கனவே 2019ல் சமயபுரம் கோவியிலில் இருந்தபோது பாகனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பாகனை கொன்ற நிலையில் கடந்த 2019ல் முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு மசினி யானை கொண்டுவரப்பட்டது.