தொடர்ந்து படத்தில் நடிப்பீர்கள் ; கடனை திரும்ப செலுத்த மாட்டீர்களா? - நடிகர் விஷாலுக்கு நீதிபதி கேள்வி

 
tn

நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.

TN

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம்  நடிகர் விஷால் படங்களை தயாரிக்க கடன் வாங்கியுள்ளார். இதன் மூலம் அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை லைகா புரொடக்சன் நிறுவனம் ஏற்று செலுத்தியது. இந்தக் கடனை நடிகர் விஷால் செலுத்தவில்லை என லைகா வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில்  2021 ஜனவரி 1 முதல் 2023 செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்கள், நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தை வெளியிட ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவு நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் விஷால் நேரில் ஆஜராகினார்.

high court

நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை செப்.19க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.