கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

 
Tasmac

பாமகவின் முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக, கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடைவிதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn

பாமக சார்பில் நடைபெறும் நெய்வேலி என்எல்சியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக 10 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டுள்ள நிலையில் 2 நாட்களாக மேல் வளையமாதேவி கிராமத்தில் நடைபெற்ற என்எல்சி பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன.

tn

இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முற்றுகைப் போராட்டம் நடக்க உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.