இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு; பிச்சைக்காரர் ஒருவர் குத்திக் கொலை!

 
dead

காட்பாடி அருகே பிச்சைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையம் அருகே ரத்த வெள்ளத்தில் ஒரு சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் பார்த்த போது, பிச்சைக்காரர் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது சடலத்தை மீட்டு போலீசார், வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காட்பாடி பேருந்து நிலையம் அருகே பிச்சைக்காரர்கள் இரவில் உறங்குவது வழக்கம். சம்பவம் நடந்த அன்று இரவு படுப்பதற்காக இடம் பிடிப்பதில் பிச்சைக்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் சராமரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். ஆத்திரமடைந்த ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொருவரை கழுத்தில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.