கரையோர மக்களே உஷார்..!! செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!
Oct 22, 2025, 11:08 IST1761111509557
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீரின் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 4,500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படிப்படியாக உயர்த்தப்பட்டு 4,500 கன அடி திறக்கப்படுகிறது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


