சென்னை கொண்டுவரப்படும் பவதாரணியின் உடல்!!

 
tn

பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

tn

இளையராஜாவின் மகளும் , பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்தார்.  அவருக்கு வயது 47. சுமார் ஆறு மாதங்களாக இலங்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணியளவில் காலமானார்.  பின்னணிப் பாடகியான பவதாரணி 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலுக்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார். பவதாரிணி இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

tn

இந்நிலையில் மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று பகல் 3.30 மணி அளவில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. தியாகராயர் நகர் முருகேசன் சாலையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பவதாரிணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.