என் கலரை வச்சு என்னை டாமினேட் பண்ணாங்க - கண்கலங்கிய ஸ்ருதி
பிக் பாஸ் சீசன் 5 இல் இன்றைய நிகழ்ச்சிகளை இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த நான்கு சீசனுக்காக வெற்றிகரமாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது.
இந்த சீசனில் இமான் அண்ணாச்சி ,யூடியூப் பிரபலம் அபிஷேக் ராஜா , விஜே பிரியங்கா, சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயமோகன், பாடகி சின்னப்பொண்ணு ,சீரியல் நடிகை பவானி ரெட்டி உள்ளிட்ட பிரபலங்களும், திரைத்துறைக்கு பரிச்சயமில்லாத பல முகங்களும் களமிறங்கினர்.
#Day3 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/vGJaotDaIo
— Vijay Television (@vijaytelevision) October 6, 2021
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5இல் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், ஸ்ருதி, ஜக்கி மற்றும் இசைவாணி ஆகியோர் ஒன்றாக இன்று பேசுகின்றனர். அப்போது ஸ்ருதி,நான் அழக்கூடாது என்று நினைத்தேன் என்று சொல்ல அதற்கு இசைவாணி உனக்கு அழணும்னு தோணுச்சுன்னா அழுதுட்டு என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதி என் அழுகை தான் என்னை ஸ்ட்ராங்கா மாற்றிஇருக்கு என்று கூற உடனே இசைவாணி, நம்மள ஒருத்தங்க ஒதுக்குறாங்கன்னா அவங்க நம்மள செதுக்குறாங்கன்னு அர்த்தம் என்கிறார். தொடர்ந்து ஸ்ருதி, என் கலரை வச்சு என்னை டாமினேட் பண்ணாங்க; அந்த கலரால் தான் இப்போ இங்க நிக்குறேன் . நான் கஷ்டப்படலன்னா நான் இந்த வீட்டுக்கு வந்துருக்க மாட்ட"என்று சொல்வது போல ப்ரோமோ முடிகிறது.