“பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது”- அண்ணாமலை

 
அண்ணாமலை

சென்னையில் எத்தனை திமுக கொடி கம்பத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுளார். 

நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அமைச்சர் உதயநிதி மேடையில் முட்டையை காட்டியெல்லாம் பேசுகிறார். முதலில் அவர் தேர்தலின்போது கூறிய நீட் ரகசியத்தை மக்களிடம் சொல்லவேண்டும். கொடிக்கம்பம் விவகாரத்தில் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட பாஜகவிற்கு நல்லது தான். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இரண்டு விதமான வளர்ச்சி இருக்கும். ஒன்று தானாக வளர்ந்து வருவது, இன்னொன்று மற்றொரு கட்சி அந்த கட்சியை வளர்த்து விடுவது. தமிழகத்தில் நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக-வால் மட்டுமே தரமுடியும்.

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அதிக உதவிகளை செய்து வருகிறது.இது போன்ற சம்பவங்களை சந்திக்கும் போது தான் ஒரு தொண்டன் தலைவனாக முடியும். சென்னையில் எத்தனை திமுக கொடி கம்பத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர்?  நவ.1 முதல் 100 நாட்களுக்கு 100 கொடிக்கம்பங்கள் நடப்படும். கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றே கொடிக்கம்பங்கள் நடப்படும். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால் கொடிக்கம்பங்களை தாமதமாக வைத்து வந்த தொண்டர்கள் இதன் பிறகு துரிதமாக வைப்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசு அதிகாரிகள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. அமைச்சர் சேகர்பாபு பகுதி நேரமாக தான் அமைச்சர் வேலையை பார்க்கிறார். துர்கா ஸ்டாலினின் பிஏவாக அமைச்சர் சேகர்பாபு தான் முழுநேரமாக செயல்படுகிறார். தமிழகத்தில் கடவுளுக்கு கொடுக்கப்படாத மரியாதை துர்கா ஸ்டாலினுக்கு வழங்கப்படுகிறது.