எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து நாளை பாஜக ஆர்ப்பாட்டம்- அண்ணாமலை

 
அண்ணாமலை

துணை குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரை தூற்றியும், அவமரியாதையும் செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எனது நடைபயணம் மு.க.ஸ்டாலினை கலங்கடித்துள்ளது- அண்ணாமலை

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, கடந்த சில நாட்களாக, நாடாளுமன்ற மரபுகளை மீறியும்‌, பொது மக்களுக்கு தாங்கள்‌ முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும்‌, அரசியல்‌ சாசன பதவியில்‌ உள்ளவர்களிடம்‌ அவமரியாதையாக நடந்து வந்ததையும்‌ நாட்டு மக்கள்‌ நன்றாக அறிவார்கள்‌. இந்த தவறான நடத்தையை இன்னும்‌ அவர்கள்‌ தொடர்ந்து கொண்டிருப்பது நாடாளுமன்றத்திற்கு மட்டுமின்றி மக்கள்‌ மன்றத்திற்கும்‌ அவமானமாகும்‌.  

மரியாதைக்குரிய துணை குடியரசுத் தலைவர் மற்றும்‌ நாடாளுமன்ற சபாநாயகர்‌ அவர்களை தூற்றியும்‌, அவமரியாதையும்‌ செய்த ராகுல்‌ காந்தி மற்றும்‌ அவருக்கு துணை நின்ற இதர எதிர்கட்சி தலைவர்கள்‌ மற்றும்‌ நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து நாளை 21.12.25, வியாழக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்‌ ஆர்ப்பாட்டம்‌ நடத்திட வேண்டும்‌.  அரசியல்‌ சாசன அமைப்புகள்‌ இயங்க முடியாமல்‌ முடக்கியவர்களுக்கு எதிராக நமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்‌ என்பதனை தெரிவித்து கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.