சென்னையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை விசாரணை!

 
ed

சென்னையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது. மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல்லிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தத். மணல் விற்பனையில் முறைகேடு, சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையில் பிரபல தொழிலதிபர் சண்முகம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

surana raid

இந்த நிலையில், சென்னையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஜோதிமணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாஜக மாவட்ட தலைவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.