போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த பாஜக!!

 
bjp

செய்யாறில் இன்று  நடைபெறவிருந்த பாஜக  போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. 

BJP

இதுதொடர்பாக பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், , "சிப்காட் நிலம் திருவண்ணாமலை அனக்காவூரைச் சார்ந்த 9 கிராமங்களில் 3,200 ஏக்கர் விளைநிலத்தை சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தியதை எதிர்த்துப்போராடிய விவசாயிகள் மீது பொய்வழக்கு போட்டதோடு அதில் 7 பேரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ததை பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு,பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை செய்யாறு ஆரணிக்கூற்றோடு கோட்டசியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு,அதற்கான அறிவிப்பை திரு.G.K.நாகராஜ் கமலாலயத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். போராட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தமிழக முதல்வர் விவசாயிகள் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்துசெய்வதாக அறிவித்தார்.

bjp

எனவே இன்று செய்யாறில் நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது மற்றும்  கிருஷ்ணகிரியைச் சார்ந்த விவசாயி அருள் என்பவர் மீது குண்டாஸ் சட்டம் ரத்துசெய்யப்படாமல் உள்ளது.அதன் பின்னணி குறித்து ஆய்வு செய்ய விவசாய அணி மாநில செயலாளர் திரு.விஜயகுமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவின் அறிக்கைக்குப் பின்னர் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.

எனவே அதுவரை விவசாயிகளை குண்டாஸில் கைதுசெய்த தமிழக அரசுக்கு எதிராக நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.