மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டிய மகாகவி பாரதியை போற்றுவோம் - வானதி சீனிவாசன்
மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டிய மகாகவி பாரதியின் பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குகிறேன் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பாரதியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பாரதியாரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்"
— Vanathi Srinivasan (@VanathiBJP) December 11, 2023
என்று பெண்ணுரிமைக்காகவும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"
என்று வீர முழக்கம் முழங்கி, கவிதையை போர்வாளாய் தீட்டி, மக்கள் மனதில்… pic.twitter.com/50y7Irj7Sz
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று பெண்ணுரிமைக்காகவும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று வீர முழக்கம் முழங்கி, கவிதையை போர்வாளாய் தீட்டி, மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டிய மகாகவி பாரதியின் பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குகிறேன்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.