பாரதியின் கனவை நனவாக்கியுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி - வானதி சீனிவாசன்

 
vanathi--srinivas-3

மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வரலாற்று சிறப்புமிக்க சட்டமான, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.   128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது. தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை" எனும் மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வரலாற்று சிறப்புமிக்க சட்டமான, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி! என கூறியுள்ளார்.