NDA கூட்டணி ஆட்சியமைக்கும் - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

 
NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது, இன்னும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக நித்தின் நிபின் போட்டியின்றி பொறுப்பேற்றுள்ளார் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளோம்.தமிழ்நாட்டில் NDA கூட்டணி நாளுக்கு நாள் வலிமையாகி வருகிறது. தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும். இன்னும் பல கட்சிகள்  NDAவில் இணையும். அ.ம.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து தற்போது நான் எந்த ஒரு கருத்தையும் கூற முடியாது 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் இணைவார்கள் அப்போது தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு மீது இருக்கக்கூடிய அதிருப்தி காரணமாக பல இளைஞர்கள், இளம் பெண்கள் பாரதிய ஜனதா கட்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆதரவளித்து வருகிறார்கள். சுமார் 5 லட்சம் பேர் 23ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரைக்கும் மகாராஷ்டிரா அரியான உள்ளிட்ட பல மாநிலங்களில் வெற்றி பெற்று இருக்கின்றோம். கேரளாவில் கூட உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றோம். அதேபோன்று தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி விரைவில் ஆட்சியை பிடிக்கும்” என்றார்.