பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை என்பது உறுதி- நிர்மல் குமார்
பாஜகவுடன் தமிழக வெற்றி கழகம் நிச்சயம் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது அதனை விசாரித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தது. ஆனால் தமிழக அரசு சார்பிலோ எந்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்படவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் திமுகவின் கட்சி சார்பிலும் ஒரு வழக்கு கூட வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படவில்லை. திமுக வழக்கறிஞர் வில்சன் அந்த வழக்கில் ஆஜராகிறார். ஆனால் திமுக தொடர்ப்பட்ட வழக்கில் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ராசா வழக்கு தொடுத்திருக்கிறார். அதுவும் திமுக சார்பில் அல்ல திமுக கட்சியின் பெயரிலோ தமிழக அரசு சார்பிலோ எந்த வழக்கும் தொடரப்படவில்லை. திமுக லாப நஷ்ட கணக்கு பார்த்து தான் செயல்படும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என சொல்லிவிட்டு அவர்களுக்கு துரோகம் செய்கிறது. திமுக இனிமேலாவது தமிழக அரசு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேற்கோள் காட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கில் உடன் இணைத்துக் கொள்ள வேண்டும்தமிழகத்தில் வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது
தமிழக முதலமைச்சர் வஃக்பு வாரிய சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக நாடக நடத்துவதில் ஏதோ காரணம் உள்ளதாக தோன்றுகிறது. பாஜக கொள்கை எதிரி, அரசியல் எதிரி என தெளிவாக எங்கள் கட்சித் தலைவர் தெரிவித்துவிட்டார். நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது. கூட்டணி குறித்து தேவையான நேரத்தில் விஜய் அறிவிப்பார்” என்றார்.


