"திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது" - அண்ணாமலை

 
Annamalai

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விவாதிக்காதே, வஞ்சிக்காதே, தமிழர்களை அவமானப்படுத்தாதே! -வெடித்த சமூகவலைத்தள பரப்புரை  #TNRejectsMekadatuAgenda
சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோகிறது.  மத்திய அரசை குறை கூறுவதை மட்டுமே தமிழ்நாடு அரசு செய்து வருகிறது .மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பணவீக்கம் அதிகமாகவே உள்ளது.

Annamalai

திமுகவின் பெரும்பாலான அமைச்சர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழில் அரைகுறை  இந்தியில் ஹீரோ.  இந்தியாவிலேயே கருப்பு பணத்தை பற்றி பேச தகுதியில்லாதவர். பிரதமர் என்ன பேசினார் என்று இவர்களுக்கு எதுவுமே தெரியாது .முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி.  ஏனென்றால் அவர்களே கருப்பு பணத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நேர்மையான நியாயமான ஆட்சி வரவேண்டும் என சபதம் எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.