திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை யார்? - எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கிண்டல் செய்த பாஜக

 
bjp

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதனை பாஜக கிண்டல் செய்துள்ளது. 

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வரும் நிலையில் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக நாளை பீகார் தலைநகர்  பாட்னாவில்  எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாஜக நகைச்சுவையாக கிண்டல் செய்துள்ளது.  பா.ஜ.க. எம்.பி.ரவி சங்கர் பிரசாத் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார். ஆனால், யார் மணகன். ஒவ்வொருவரும் தங்களை பிரதமர் வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள். இவ்வாறு கூறினார்.