பாமக நிர்வாகி கொலையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

 
tn

செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜ் நேற்று மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு போலீசார் நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

tn

இதையடுத்து மருத்துவமனை முன்பு பாமக நிர்வாகிகள் மற்றும் நாகராஜன் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட எஸ்பி உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக  கே.கே. நகர் பகுதியை  சேர்ந்த அஜய் என்பவரை போலீசார் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார். 

tn

இந்நிலையில் செங்கல்பட்டில் பாமக நிர்வாகி கொலையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் செங்கல்பட்டு - திண்டிவனம் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடத்தி  வருபவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.