தண்டையார்பேட்டையில் பாய்லர் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

 
tn

சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இதில் 500ற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  

tn

இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

tn

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் பெருமாள் (52) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.