பெரும் பரபரப்பு! கேரளாவில் குண்டுவெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு

 
bomb blast

கேரளாவில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் இன்று வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தது. ஞாயிற்று கிழமையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், திடீரென அந்த வழிபாட்டு தளத்தில் குண்டுவெடித்தது. சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சப்தத்துடன் 3 குண்டுகள் வெடித்துள்ளன

எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடித்தது என்ன மாதிரியான குண்டுகள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.