பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் - Proton மெயிலை முடக்க திட்டம்

 
tnt

சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கடந்த 9ஆம் தேதி  ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகர், முகப்பேர், பாரிமுனை, ஓட்டேரி, கோபாலபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

police

இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளிகளில் திரண்டதால் பதற்றம் அதிகரித்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக, இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்தது . மர்ம நபரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முயன்று வரும் நிலையில், வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி| மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. 

school

இந்நிலையில் சென்னைப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை நாடியது காவல்துறை.  மின்னஞ்சல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட Proton மெயிலை முடக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் அனுப்பிய நபரின் விவரங்களை  ஸ்விட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  Proton நிறுவனம் வழங்க மறுத்ததால் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.