#BREAKING : பிக்பாஸ் செட் இழுத்து மூட உத்தரவு..!

 
1 1

ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பிக்பாஸ் புதிய சீசன் நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. ஹிந்தியில் சல்மான்கான், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் என ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களே இந்த புதிய சீசன்களையும் நடத்தி வருகின்றனர். அதேபோல தமிழில் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார்.


கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி 19 போட்டியாளர்களுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் கடந்த வருடமே அவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலக முடிவு எடுத்து விட்டதாகவும் திரையுலகில் மற்றும் இன்னும் சில பணிகளில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

அதேசமயம் பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விட்டு அதிலிருந்து விடை பெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாகவே கூறியிருந்தார். அதனால் இந்த 12வது சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்கிற கேள்வி கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் சேனல் நிர்வாகத்திற்கும் சுதீப்பிற்கும் ஏற்பட்ட சுமுக உடன்படிக்கை காரணமாக தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு இந்த 12வது சீசனையும் கிச்சா சுதீப் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டாராம்.

இந்நிலையில் கன்னட 'பிக்பாஸ்' செட்டை மூட வேண்டும் என அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அங்கு கழிவுநீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வளாகத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தளத்திற்கு வெளியே வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. உற்பத்தி குழு 250 KLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (STP) நிறுவியதாகக் கூறினாலும், அந்த வசதியில் சரியான உள் வடிகால் இணைப்புகள் இல்லை என்பதையும், STP அலகுகள் செயல்படாமல், பயன்படுத்தப்படாமல் கிடப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். எந்தவொரு சுத்திகரிப்பும் இல்லாமல் கழிவுநீர் வெளிப்படையாக வெளியேற்றப்படுவதாகவும், சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.இந்த ஆய்வில் மோசமான கழிவு மேலாண்மை நடைமுறைகளும் வெளிப்பட்டன. 

இந்த பல விதிமீறல்களைக் காரணம் காட்டி, சுற்றுச்சூழல் விதிமுறைகளை தயாரிப்புக் குழு கடைப்பிடிக்கும் வரை பிக் பாஸ் கன்னட தளத்தில் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.