#BREAKING : நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Feb 9, 2026, 10:22 IST1770612746256
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய விரிவான சோதனையின் முடிவில், அங்கு வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நிம்மதியடைந்தனர். இருப்பினும், பாதுகாப்பு கருதி முக்கிய இடங்களில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


