#BREAKING : கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது..!

 
1

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

அந்த மாணவி சென்னை காவல் ஆணையருக்கு இமெயில் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் 15 வருடங்களுக்கு முன்பு தான் கலாஷேத்ரா கல்லூரியில் படித்த போது நடன பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைமேற்கொண்டனர். விசாரணையில் 15 வருடங்களுக்கு முன் நடன பேராசிரியர் ஸ்ரீஜித், மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீஸார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அடையாறில் தனியாக நடன பள்ளி நடத்தி வரும் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் நடன பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவரை நேற்று இரவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு ஸ்ரீஜித்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.