#BREAKING : ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்..!
5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்; இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு
ஆண்டு தோறும் 5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ. 11 லட்சம் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.
அஞ்சலை அம்மாள் பெயரில் விருது
வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் பல்வேறு விருதுகளையும் அறிவித்தார்.
அப்போது அவர், மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுவழங்கப்படும்.
இதில் முதல் பரிசு பெறும் விவசாயிக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ. 1.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.சிறு, குறு விவசாயிகள் இதில் கலந்து கொள்ளலாம்.
கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி செய்பவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் ஆகியவற்றை குறைந்தது 1 ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

