#BREAKING : பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..!

 
1

9-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் பாபர் அசாம் 3 வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக டி20, ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக சஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கி மீண்டும் பாபர் அசாம் தொடர உள்ளார். இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அஸாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.