#BREAKING : பிரபல யூட்யூபர் மாரிதாஸ் கைது..!

 
1 1

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாஸை கைது செய்தனர் சைபர் கிரைம் போலீசார். கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 41பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி நடவடிக்கை.

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வந்தார்  பிரபல யூட்யூபர் மாரிதாஸ்,

அதாவது விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி என தெரிவித்து எக்ஸ் ததளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், விஜயோடு 1000 கருத்து வேறுபாடுகள் உண்டு ஆனால் இப்படி குறுக்கு புத்தியல் நீதிமன்றம் வழியாக என்ற போர்வையில் திமுக ஒரு தரப்பை அழிக்கவோ அவமானப்படுத்தவோ முடியும் என்றால் இது இன்று விஜய்க்கு நாளை நமக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு வெக்கமே இல்லாமல் மீடியா கூட்டம் ஒத்து ஊதுவது.

இதெல்லாம் வெக்கமா இல்லையா திமுக? நீதிமன்றம் 1 நாளாவது அவகாசம் கொடுத்து விஜய் தரப்பு வாதத்தையும் கேட்டிருக்க வேண்டாமா? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இந்த நாடகம் நடந்துள்ளது. உடனடியாக விஜய் தரப்பு உச்ச நீதிமன்றம் நாட வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன என்பது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு வீடியோ வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த புகாரில் அவரை போலீசார் சற்றுமுன்  கைது செய்துள்ளனர்.