#BREAKING : தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’...10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

 
1 1

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும் என்றும், வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைகான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20.4 செ.மீ. வரை மழை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இன்று அக்டோபர் 21ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* சென்னை,* செங்கல்பட்டு,* திருவள்ளூர்,* காஞ்சிபுரம்,* கள்ளக்குறிச்சி,* பெரம்பலூர்,* அரியலூர்,* தூத்துக்குடி,* திருநெல்வேலி,* கன்னியாகுமரி
 

இன்று அக்டோபர் 21ம் தேதி கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* தென்காசி* விருதுநகர்* மதுரை* சிவகங்கை* திருச்சி* திருவண்ணாமலை* ராணிப்பேட்டை
 

நாளை அக்டோபர் 22ம் தேதி, அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* மயிலாடுதுறை* கடலூர்* விழுப்புரம்* செங்கல்பட்டு

 

நாளை அக்டோபர் 22ம் தேதி, மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நாகை* திருவாரூர்* புதுக்கோட்டை * அரியலூர்* பெரம்பலூர் * கள்ளக்குறிச்சி* திருவண்ணாமலை* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* சென்னை* திருவள்ளூர்
 

நாளை அக்டோபர் 22ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:புதுக்கோட்டை* திருச்சி* சேலம்* தர்மபுரி * திருப்பத்தூர்* வேலூர்
 

நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி, மிக கனமழை ( ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* திருவள்ளூர்* சென்னை* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு
 

நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* வேலூர்* திருப்பத்தூர்* திருவண்ணாமலை* விழுப்புரம்* கள்ளக்குறிச்சி * கடலூர் 

அக்டோபர் 24ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* கோவை* நீலகிரி* ஈரோடு* சேலம்* தர்மபுரி * கிருஷ்ணகிரி
 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.