#BREAKING : இபிஎஸ்-க்கு 10 நாள் கெடுவிதித்த செங்கோட்டையன்..!
Updated: Sep 5, 2025, 10:49 IST1757049542972
செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது : எம்.ஜி.ஆர் 1972ல் அதிமுகவை தொடங்கியபோது அதிமுகவின் கிளை செயலாளராக பணியாற்றினேன். 1975ல் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் என்னை பொருளாளராக நியமித்தார். அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பிரிந்து சென்றவர்களை இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு வைத்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைக்கவில்லையென்றால் நாங்கள் ஒருங்கிணைப்போம் என அவர் கூறினார்.
கழகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என பொதுச்செயலாளர் அவர்களிடம் 6 பேர் பேசினோம். ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறினார்.


