சரியான திட்டமிடல் இல்லாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளனர் - அமைச்சர் சேகர்பாபு

 
sekar babu

தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதை அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

tn
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , "மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல், மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாமல், கடந்த ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளனர்.

sekar babu

புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு 317 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது; தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதை அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது; போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மாற்றுப்பாதையில் செல்வதற்கு ஏதுவாக, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், முன் அனுமதி பெற்று சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.