#BREAKING 'நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் விரைவில் இயக்கம்' - அமைச்சர் சிவசங்கர்

 
tn

நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Sivasankar

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,கடந்த அதிமுக ஆட்சியில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆட்களை  பணியமர்த்தாத காரணத்தினால் பேருந்துகளின் பல வழித்தடங்கள் நிறுத்தப்பட்டது,  தற்போது போக்குவரத்துத்துறை சார்பாக 685 ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

bus

நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் ஓட்டுநர் , நடத்துனர்களை நியமித்த பிறகு மீண்டும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநர் , நடத்துனர் இல்லாத காரணத்திற்காகவே பேருந்துகள் நிறுத்தப்பட்டன என்றார்.