தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

 
tn

கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gun

கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் எம்.பி. சுரேஷ் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சுரேஷ் அனைத்து வணிகர் சங்கங்களின் நகர தலைவராகவும் உள்ளார்.சுரேஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Death

அத்துடன் இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சுரேஷுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிருஷ்ணகிரி நகரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.