#Breaking அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனை அறிக்கை

 
tn

சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர் வீடு , நண்பர்களின் வீடு என 10 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

tn

இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார்  அரசு பன்னோக்கு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவமனை ஆறாவது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் என பலரும் விசாரித்து சென்றனர். 

tn

இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.  ஓமந்தூரார் அரசு பன்னோக்கு  மருத்துவமனையில் அமைத்து செந்தில் பாலாஜிக்கு அஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது.  இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதை பார்க்க ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.

tn

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது  ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிந்தே வந்துள்ளது. இதனால் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

tn

இதுகுறித்து வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் , மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை 14.06.2023 அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.