'சேரி' என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது - குஷ்பு

 
th

வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல் சேரி எனக் கூறினேன்  என்று நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

khushbu

சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் ,  நடிகையுமான குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேளச்சேரின்னு இருக்கு அதுக்கு என்ன அர்த்தம்? சேரிக்கு என்ன அர்த்தம் நீங்க விளக்கம் கொடுங்க ? சேரி என்ற வார்த்தை அரசு ரெக்கார்ட்டில் உள்ளது. எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன். வேளச்சேரி என்ற ஊர் பெயர்களிலும் சேரி என்ற பெயர் உள்ளது . எந்த இடத்திலும் நான் தகாத வார்த்தையை பயன்படுத்தவில்லை .சேரி என்று பேச்சுக்காக என்னால் மன்னிப்பு கேட்க முடியாது.

khushbu

தாழ்த்தப்பட்ட மக்களை குறை கூறி சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.  திமுகவினர் குறித்து பேசினால் காங்கிரஸ் ஏன் போராடுகிறது.   பயந்து பின்வாங்கக்கூடிய ஆள் நான் இல்லை என் வீட்டின் முன் போராட்டம் நடத்த வருவதாக கூறினார்கள்.  ஆனால் யாரும் வரவில்லை என்றார்.