கூகுள் மேப்பை நம்பி குறுகிய பாலத்தில் வந்து சிக்கிய கார்
குளித்தலை பேருந்து நிலையம் அருகே தென்கரை பாசன வாய்க்காலில் சிறிய நடைபாலத்தை கடகம் என்ற காரின் முன் சக்கரம் பாலத்தின் விளிம்பு அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவர் தனது காரில் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் காரில் கும்பகோணத்திற்கு திரும்பி உள்ளார். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த அவர் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை செய்வதற்காக குளித்தலையில் பள்ளிவாசல் உள்ள இடம் நோக்கி கூகுள் மேப் உதவியுடன் தனது காரில் வந்துள்ளார். அப்போது பள்ளிவாசல் செல்வதற்காக தென்கரை பாசன வாய்க்காலின் குறுக்கே உள்ள சிறிய நடைபாதத்தை கடந்து செல்லலாம் என்று காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நடைபாதத்தின் வழியாக காரை இயக்கிய போது காரின் முன் சக்கரம் பாலத்தின் விளிம்பில் கீழ இறங்கி அந்தரத்தில் தொங்கியவாறு இருந்தது.
தென்கரை பாசன வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலையில் காரில் அந்தரத்தில் தொங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கிரேன் உதவியின் மூலம் காரை பாலத்தின் விளிம்பிலிருந்து தூக்கி மீட்கப்பட்டது. கூகுள் மேப் உதவியுடன் சிறிய நடைபாலத்தை கார் கடக்க முயன்று பாலத்தின் விளிம்பில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


