சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 
seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

seeman

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.  இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனிக்கொடி எனக்கூறி கொடி ஒன்று ஏற்றிவைத்தார். கொரோனா விதிகளை மீறி அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்த கூட்டம் தொடர்பாக கிராம அலுவலர் ராஜா அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

seeman

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கான கொடி என்று கூறி தனிக்கொடி ஒன்றை சேலத்தில் ஏற்றிய சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் பேரில் சேலம் அம்மாபேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  தமிழ்நாடு கொடி என சீமான் கொடி ஏற்றியதுடன்,   மொழி வாரியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது கவனிக்கத்தக்கது.