பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு!
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை அபிராமபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்து கடவுளை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்நிலையில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்து கடவுகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.