இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு

 
fisher

நாகை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்ட விவகாரத்தில்  இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

fisher

நாகை மீனவர்கள் 4 பேர் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். 4 செல்போன்கள், 500 கிலோ வலைள், ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

arrest

 இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள் 4 பேர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்கொள்ளையர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளது.