மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதிவு

 
tn

மத்திய இணை அமைச்சர் சோபா பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களை காரணம் என்று கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். 

Shobha

அத்துடன் இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தியும் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மற்றும் பாஜக மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.

tn

இந்நிலையில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய புகாரில் மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா ஏற்கெனவே மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.