மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி நிதி - மத்திய அரசு

 
modi

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், புயல் பாதிப்பு மற்றும் மழை வெள்ளம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

stalin and modi

இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரூ.5,060 கோடி வழங்குமாறு முதலமைச்சர் கோரியிருந்த நிலையில், முதற்கட்டமாக ரூ.450 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி சற்று நேரத்திற்கு முன்னர் தொலைபேசி வாயிலாக பேசிய நிலையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.