பிரதமரின் இதயத்தில் தமிழக வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது - பியூஸ் கோயல் பேச்சு!

 
piyush

பிரதமரின் இதயத்தில் தமிழக வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். 

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. தொழில் பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்களை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளத்துடன் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.  வர்த்தக மையத்தில் ஆங்காங்கே எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.  இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றுள்ளன.   இம்மாநாட்டில்  50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  

tn

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பிரதமரின் இதயத்தில் தமிழக வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் செங்கோல், தமிழகத்தை சேர்ந்தது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். இந்தியாவின் பண்பாட்டிற்கு தமிழக கலாச்சாரம் அளித்து வரும் பங்கு மிகப்பெரியது. இந்தியாவின் கலாச்சார தொடர்புகளை பிரதிபலிக்கவே காசி சங்கமம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன என கூறினார்.