'ரெட் அலர்ட் எச்சரிக்கை' : 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

 
rain-34

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று , வட தமிழக கடற்கரை நோக்கி நகரும்.  அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கும் இதன் காரணமாக இன்று சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். 

டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு ,கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ,புதுக்கோட்டை ,ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

karur rain

நாளை திருவள்ளூர்,  கள்ளக்குறிச்சி ,சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் ,  தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல்  மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை ,செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர் ,நீலகிரி, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்,

rain

நாளை மறுநாள் கோயம்புத்தூர் ,நீலகிரி ,சேலம் ,வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ,  சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வருகிற 13-ஆம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர் ,கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,   ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.  14ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் ,சேலம் ,திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும்  பெய்யக்கூடும். 

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக்கடல் ,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.