"9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
rain

9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் வருகிற 23-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

அதேபோல் இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, சேலம் ,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29,  குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை  ஒட்டியிருக்கும். அதேசமயம் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.