தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை

 
rain

தமிழ்நாட்டில் மதியம் 12 45 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் ,சிவகங்கை, இராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.