மதியம் ஒரு மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
அடுத்த மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. அத்துடன் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் மதியம் ஒரு மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.