13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

 
rain

13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது,  காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.